Skip to main content

தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் - எட்டாம் தேசியக் கருத்தரங்கம்

 அறிவு சார்ந்த சிந்தனையில் ஜூலை 2018-ல் நடைபெற்ற தமிழ்த்தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பல ஆய்வாளர்கள் தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். அவர்களின் ஆய்வுகளை யாவும் இன்றைய சமுதாயத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. பகுத்தறிவு செவ்வையாக அமைவதற்கும், அது வளர்வதற்கும் ஐம்பொறிகளும் பழுதின்றி அமைய வேண்டியது அவசியம் ஆகும். அந்தப் பொறிகள் குறித்த கருத்துக்களை ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ஆய்ந்து சமர்ப்பித்துள்ளார்.


ஒருவர் கண்கள் குருடாகவோ அல்லது காதுகள் செய்விடாகவோ இருந்தால் எந்த உணர்வும் இல்லாத இலக்கியம் தான் படைக்க முடியும், அந்த வகையில் சமுதாயத்தில் உள்ள குருடர்களும்,செவிடர்களுக்கும்,ஊமையர்களுக்கும் மிகவும் பக்குவமாக தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த சமூகம் அறிவு வளர்ச்சிக்கு உரியது என்றும் இன்றைய அறிவியல் வளர்ந்த சமூகம் ஒழுக்கச் சீர்கேடான சமூகம் என்றும் சாடி குற்றங்களை பிரதிபலித்துக் காட்டியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இதனைக் கருதிர்கொண்டாள் சமூகமே அறிவு வளர்ச்சிக்கு உரிய நிலையம் என்பது தெளிவாகிறது. எனவே சமூகத்தைச் சார்ந்த ஒருமனிதன் தன இயற்கை நுண்ணுணர்வாலும், உழைப்பாலும் பெறும் அறிவு, அந்த சமூகம் முழுமைக்கும் உரியதாகிறது.

இன்று அந்த நிலையை எந்தச் சமூகம் பின்பற்றிக் கொள்கிறதோ அதுதான் உயர்வான சமூகம் என்று அறிவிற்சிறந்த படைப்பாளர்கள் கருதுகின்றார்கள். இந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்கள் யாவும் சமுதாயத்தில் ஆழ்ந்துகிடக்கும் சங்கடங்களையும்,அதனால் உண்டாகும் கொடுமைகளையும் கண்டு பேதலித்து நிற்கிறார்கள்.இதனைக் கருத்திற்கொண்டால் அறிவு காலந்தோறும் வளரும் ஒரு திராட்சைக்கொடிக்கு ஒப்பாகும். இதனை தொல்காப்பியர் நெறியாளர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்.

   "மக்கள் தாமே ஆறறிவுயிரே
     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!"
                                                                 - தொல்காப்பியம்:மரபு 33

புலன் அறிவின் அடிப்படையில் மக்களுடன் பிற உயிர்களாகிய புள், விலங்கு இவற்றுடன் சேர்த்து கூறிய நன்னூலாரின் தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்டு நின்ற தொல்காப்பிய நெறியாளர் மக்கள் பிற உயிர்களினும் மேலானது என்று வரையறை கூறிய மாண்பு போற்றுதற்குரியதாகும். அந்த மாண்புடைய மக்கள் வாழ்வியலைப் பகுத்தும் தொகுத்தும் வகுத்தும் சிறுத்தும் தந்த ஆய்வாளர்களின் முயற்சி பாராட்டுக்குரியதாகும். வாழ்க தமிழ்!

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியத்தில் ஓர் அகழ்வாய்வு - ஆறாம் தேசிய தமிழ் கருதரங்கம்

ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெ .வெங்கடராமன் வெளியிட பெருந்தன்மை இதழாசிரியர் ப.சிவகுமார் பெற்றுக்கொண்டார்  உடன் பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் பேராசிரியர் க.அழகர்  சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இலக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இலக்கிய ஆய்வை பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வரல்களின் ஆய்வுகளின் பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது. சமூக மாற்றம் தேடும் மக்களின் உள்ளத்தை படம்பிடிக்க , இருபதாம் நூற்றாண்டில் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றம் பேராசிரியர் முனைவர் க.அழகர் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் புலவர் ப.சிவகுமார் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் மிடாலக் கவிஞர் பொன்.செல்வராசு அவர்களும், ஆய்வு மேலாண்மை ஆங்கில பேராசிரியர் முனைவர் து.ஜெயலட்சுமி அவர்களும் ஆய்வாளர்களை அழைத்து கட்டுரைகளைச் சமர்பிக்கச்செய்து அழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை மேன்மை அடையச் செய்ய முயன்று வரும் அறிஞர் பெருமக்களை  பாராட்ட  நினைத்தோம்.                       ...

இலக்கிய புதுமைகள் - ஐந்தாம் கருத்தரங்கம்

  தொழில் அதிபர் ராஜா அவர்கள் (இடது) மிடலாக் கவிஞர் பொன் செல்வராஜ் (வலது) அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். அகநானூறு காட்டும் தமிழ் மாந்தர்களின்  வாழ்வியல் , அறம் ,பொருள், இன்பம், அன்பு நெறி,  அஃறினை  உயிர்களின் மீது அன்பு செலுத்துதல், காதல்,வீரம் போன்றவற்றை ஆய்வு செய்து வழங்கிய இருபது ஆய்வாளர்களின் முத்தான ஆய்வுகளை முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றத்தில் படைத்தனர். விழாவிற்கு வாழ்த்துரையை திருவில்லிபுத்தூர்   மாவட்ட கல்வி அலுவலர் அ .விஷ்ணுதாஸ் அவர்கள் வழங்கினார். ஐந்தாம் கருத்தரங்கம்   நூல் வடிவில்

மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)

மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மாணவர்களின் படைப்புகளை  "மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)" என்ற நூலாக புலவர்.சிவகுமார் அவர்கள்  மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க  இந்நூலினை தம் சொந்த செலவில் வெளியிட்டார்.   படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் சமுதாய மாற்றம் தேடியுள்ளனர். எனினும் இளம் பருவத்தில் சமூகச் சிந்தனை தோன்றுவது என்பது அரிதான செயல்தான். நூலில் இடம் பெற்றுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் சமூக சிந்தனை,மக்கள் புரட்சி , கல்விச் சிந்தனைகள் , சமுதாய மாற்றம் போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு  ஆண்டும் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றமும், பெருந்தன்மை மாத இதழும் நடத்துகின்ற போட்டிகளின் கட்டுரைகளையும் ஆய்வரங்கு நிகழ்வில் தந்த ஆய்வு ஏடுகளையும் அச்சிட்டுக் கொடுக்க உறுதுணையாக நிற்கிறோம். தமிழ் சமுதாயம் இதனை வரவேற்று ஊக்கமும்,ஆக்கமும் நல்குவார்கள் என்றே  நம்புகிறோம். "எல்லாப் புகழும் என் தாய் தமிழுக்கே!"