Skip to main content

Posts

58வது ஆண்டு நூலக நிறைவு விழா

  58வது ஆண்டு நூலக நிறைவு விழா இராஜபாளையம் அரசு பொது நூலகத்தில்  07.11.2025 அன்று நடைபெற்றது. இதில்  நூலகர் சண்முக வேல் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் க.அழகர்,  கவிஞன் பதிப்பக உரிமையாளரும் வாசகர் வட்ட செயலாளருமான சிவகுமார், பொருளாளர் காளீஸ்வரன் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நூலகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்  நடத்தி பரிசளிக்கப்பட்டது. நன்றியுரை நூலகர் சங்கரியம்மாள் அவர்கள் கூறினார்கள்.
Recent posts

உழவர் பிள்ளைத்தமிழ் - சிற்றிலக்கிய நூல் வெளியீட்டு விழா

  புலவர் ப.சிவகுமார் அவர்கள் எழுதிய ' உழவர் பிள்ளைத்தமிழ் ' சிற்றிலக்கிய  நூல் வெளியீட்டு விழா 26.04.2025 அன்று அரசு பொதுநூலகம்  இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நூலை திரு.பெரி.சந்திரசேகர் (UCO வங்கி முதுநிலை மேலாளர்) வெளியிட அதனை திரு.எஸ்.ஆதிநாராயணன் (மேனாள் துணை ஆட்சி தலைவர்) பெற்றுக்கொண்டார். திரு.சுப்பிரமணியன் (சாலியர் மலர் ஆசிரியர்) முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞன் பதிப்பகம். 

அன்பின் அடையாளம் - கவிதை நூல் வெளியீட்டு விழா

  முனைவர் பொன்னம்பலம் (மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர்) அவர்கள் எழுதிய ' அன்பின் அடையாளம் ' கவிதை நூல் வெளியீட்டு விழா 02.06.2024 அன்று தொழில் வர்த்தக சங்கம் இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நூலை திருமதி.பார்வதி பொன்னம்பலம் வெளியிட அதனை திரு.பாலமுருகன், செல்வி.ஜெயஸ்ரீ.செல்வி. ஜெயநிஷா பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞன் பதிப்பகம். 

இன்சொல் மலர்கள் -மரபு கவிதை நூல் வெளியீட்டு விழா

  சத்திரப்பட்டி கவிஞர் குருசாமி அவர்கள் எழுதிய "இன்சொல் மலர்கள்" என்ற நூலினை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுலவர் மணிவண்ணன் அவர்கள் வெளியீட ராஜூக்கள் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.ராஜசேகர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவானது 2009ஆம் ஆண்டு இராஜபாளையத்தில் உள்ள ராஜபாளையம் வர்த்தக சங்கம் அரங்கில் நடைபெற்றது.

மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)

மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மாணவர்களின் படைப்புகளை  "மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)" என்ற நூலாக புலவர்.சிவகுமார் அவர்கள்  மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க  இந்நூலினை தம் சொந்த செலவில் வெளியிட்டார்.   படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் சமுதாய மாற்றம் தேடியுள்ளனர். எனினும் இளம் பருவத்தில் சமூகச் சிந்தனை தோன்றுவது என்பது அரிதான செயல்தான். நூலில் இடம் பெற்றுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் சமூக சிந்தனை,மக்கள் புரட்சி , கல்விச் சிந்தனைகள் , சமுதாய மாற்றம் போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு  ஆண்டும் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றமும், பெருந்தன்மை மாத இதழும் நடத்துகின்ற போட்டிகளின் கட்டுரைகளையும் ஆய்வரங்கு நிகழ்வில் தந்த ஆய்வு ஏடுகளையும் அச்சிட்டுக் கொடுக்க உறுதுணையாக நிற்கிறோம். தமிழ் சமுதாயம் இதனை வரவேற்று ஊக்கமும்,ஆக்கமும் நல்குவார்கள் என்றே  நம்புகிறோம். "எல்லாப் புகழும் என் தாய் தமிழுக்கே!"

தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் - எட்டாம் தேசியக் கருத்தரங்கம்

 அறிவு சார்ந்த சிந்தனையில் ஜூலை 2018-ல் நடைபெற்ற தமிழ்த்தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பல ஆய்வாளர்கள் தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். அவர்களின் ஆய்வுகளை யாவும் இன்றைய சமுதாயத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. பகுத்தறிவு செவ்வையாக அமைவதற்கும், அது வளர்வதற்கும் ஐம்பொறிகளும் பழுதின்றி அமைய வேண்டியது அவசியம் ஆகும். அந்தப் பொறிகள் குறித்த கருத்துக்களை ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ஆய்ந்து சமர்ப்பித்துள்ளார். ஒருவர் கண்கள் குருடாகவோ அல்லது காதுகள் செய்விடாகவோ இருந்தால் எந்த உணர்வும் இல்லாத இலக்கியம் தான் படைக்க முடியும், அந்த வகையில் சமுதாயத்தில் உள்ள குருடர்களும்,செவிடர்களுக்கும்,ஊமையர்களுக்கும் மிகவும் பக்குவமாக தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த சமூகம் அறிவு வளர்ச்சிக்கு உரியது என்றும் இன்றைய அறிவியல் வளர்ந்த சமூகம் ஒழுக்கச் சீர்கேடான சமூகம் என்றும் சாடி குற்றங்களை பிரதிபலித்துக் காட்டியுள்ளனர் ஆய்வாளர்கள். இதனைக் கருதிர்கொண்டாள் சமூகமே அறிவு வளர்ச்சிக்கு உரிய நிலையம் என்பது தெளிவாகிறது. எனவே சமூகத்தைச் சார்ந்த ஒருமனிதன் தன இயற்கை நுண்ணுணர்வாலும், உழைப்பாலும்...

சங்க இலக்கியத்தில் வாழ்வியல் அகழ்வாய்வு - ஏழாம் தேசிய கருத்தரங்கம்

பேராசிரியர் சங்கரேஸ்வரி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் முனைவர்.க.அழகர் , செயலாளர் புலவர் சிவகுமார் வழங்கினர். உடன் பொருளாளர் கவிஞர் காளீஸ்வரன்  இருந்தார். மே 2017ல் பெருந்திணை தமிழாய்வு மன்றம் சார்பாக ஏழாம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதில் பல ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை பதிவேற்றுள்ளனர். சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இயக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இளகிய ஆய்வப்பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வலர்களின் ஆய்வு பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது. சமுகமாற்றம் தேடும் மக்களின் உள்ளத்தைப் படம்பிடிக்க இருபத்தோராம் நூற்றாண்டில் பெருந்தமை தமிழாய்வு மன்றம் பேராசிரியர் முனைவர் க.அழகர் அவர்களும், முதுநிலை தமிழாசியர் புலவர் ப.சிவகுமார் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் மிடலைக் கவிஞர் பொன்.செல்வராசு அவர்களும், ஆய்வு மேலாண்மை ஆங்கிலப்பேராசிரியர் முனைவர் து.ஜெயலட்சுமி அவர்களும் ஆய்வாளர்களை அழைத்து கட்டுரைகளைச் சாமர்ப்பிக்கச் செய்து அழிந்து வரும் தமிழ்சமுதாயத்தை மேன்மை அடைய செய்ய முயன்ற அறிஞர்களை பாராட்...